நான் ஒரு ஓவியை

துலாரி தேவி, கீதா உல்ஃப், சாலை செல்வம்

பீகார் மாநிலத்தில் கங்கை ஆற்றங்கரையோரம் வாழும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த துலாரி தேவி உள்ளூர் சந்தையில் மீன் விற்றுப் பிழைக்கும் சிறுமியாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர். வசதிப் படைத்தவர்களின் வீடுகளில் பாத்திரம் தேய்த்து வறுமையை எதிர் கொண்டவர். பீகார் மாநிலத்துக்கு உரித்தான மிதிலா கலை மரபில் புகழ்ப் பெற்று விளங்கிய ஒவியர் ஒருவருடைய வீட்டில் அவர் பணியாளராக வேலைக்குச் சேர்ந்த போது, அவருடைய முதலாளியம்மா வரைந்த ஓவியங்கள் இவரை வெகுவாக கவர்ந்தன. தானும் ஓவியராக வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த பெண் ஓவியர் செய்தது போல தானும் செய்து பழகினார்.
துலாரி தேவி ஓவியரான கதையை அவர் தீட்டியுள்ள ஓவியங்களினூடாகவே சொல்லும் அரிய கலைப் படைப்புதான் நான் ஒரு ஓவியை.

 9.95

In stock

Share on Pinterest
Share by Email










Submit
Weight240 g
Dimensions270 × 230 mm
ISBN

978-93-83145-20-1

Pages

32

Printing

Offset-printed

Binding

Paperback

HSN Code

49030010